Tuesday, 6 March 2012

உனக்கானவை

என்னால் மட்டுமே முடியும்
என்னும் எண்ணத்தில்தான் எழுகிறேன்
நான் மட்டுமே இருக்க வேண்டும்
என்னும் திமிரில் தான் திரிகிறேன்
உன்னை உயிரினும்
உயிராகச் சீராட்ட‌


எனக்காக உயிர் கொடுப்பாயா என்றாய்
முடியவே முடியாதென்றேன்
நீ நினைக்கிறாயா
அது என் உயிர் ஆசையால் என்று
அல்லவே அல்ல‌
அது உன்னுடனான வாழ்வின்
மீதுள்ள ஏக்கத்தால் மட்டுமே